Posts

Showing posts from June, 2022

எண்ணங்களே வாழ்க்கை!

Image
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு மந்திரி. இவங்க ரெண்டு பேரும் ஒரு நாள் மாலை நேரம் நடைபயிற்சி போனாங்க. ஒரு ஆத்தங்கரை ஒரமா போயிட்டு இருந்தாங்க. அப்போ அங்கே ஒரு கொடியில வெள்ளரிக்காய் காய்ச்சு தொங்குவதை பார்த்த ராஜா... "மந்திரி அந்த வெள்ளரிக்காய பறிச்சுட்டு வா சாப்பிடலாம்ன்னு சொன்னார். மந்திரி பறிக்க போனார். அங்கே உக்கார்ந்து இருந்த ஓரு குருடன் சொன்னான். ஐயா அது வெள்ளரிக்காய் இல்ல. அது குமட்டி காய். அது தின்னா வாந்தி தான் வரும். ராஜா சொன்னார். யோவ் மந்திரி.!! அத பறிச்சு சாப்பிடு. வாந்தி வருதான்னு பாக்கலாம். வேற வழி இல்லாம மந்திரி சாப்பிட்டார். உடனே மந்திரிக்கு குமட்டிக்கிட்டு ஒரே வாந்தி. ராஜா கேட்டார். யோவ்.!! கபோதி..!! இதுக்கு என்ன தீர்வு.? ன்னு. அந்த குருடன் சொன்னான். அது பக்கத்துல ஒரு கை மாதிரி பச்சை இலை இருக்கும். அத கையில கசக்கி மந்திரி வாயில விட்டா வாந்தி நிற்கும் ன்னு. ராஜாவும் அப்படியே பண்ண... மந்திரிக்கு வாந்தி நின்னு போச்சு. மந்திரிக்கு போன உசுரு திரும்பி வந்தது. ராஜா குருடனை பார்த்து கேட்டார். உனக்கு தான் கண் தெரியாதே.? எப்படி சரியா தீர்வு சொன்னாய்.? குருடன் சொன்னா...

உழைப்பு

Image
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ உழைப்பில் தான் சுகம் உள்ளது. உழைப்பில்லாமல் முன்னேற முடியாது. வேலை செய்யாமல் ஒருவரிடம் பணம் பெறுவது பிச்சைக்குச் சமம். வேலையின்றி எவன் துாங்குகிறானோ அவனைக் காண்பது கெடுதல். எவன் ஒருவன் உடம்பை உழைப்பினாலும், மனதை உற்சாகத்துடன் வைத்துள்ளானோ அவனே சாதனையாளனாக மாறுவான். நம்முடைய இஷ்டப்படி உலகம் நடக்கவில்லை, கடவுளின் இஷ்டப்படித் தான் உலகம் நடக்கிறது. ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

வெற்றி நிச்சயம்!

Image
காற்றாய்ப் பறந்து வரும் கவலைகளைக் கண்டு, கதி கலங்காதே... காற்றைப் போலவே மறைந்து போய் விடும்... வீசிய காற்று புயலாவாதும், சூறாவளியாவதும், தென்றலாவதும் உன் எண்ணங்களில் தான் உள்ளது... நல்லதை எடுத்துக் கொள்... வெற்றி நிச்சயம்!

சிந்தனைத் துளி

Image
அன்பை விதைப்போம்...  ஆனந்தத்தை அறுவடை  செய்வோம்.. முடியவில்லை என்றால், அனுதாபத்தையாவது  அறுவடை செய்யும் வகையில் நம்மை மாற்றிக் கொள்வோம். அப்படியில்லாமல்,  வெறுப்பை மட்டுமே  அறுவடை செய்யும் நிலை  ஏற்படுமானால்,, நாம் தோற்றுப் போய் விட்டோம் என்று அர்த்தம்...💐💐💐

சிந்தனைத் துளி

Image
வாழ்வில் உதவி செய்ய... ஊக்கப்படுத்த யாருமில்லை என்று தயவுசெய்து கவலை கொள்ளாதீர்கள்… உங்களையும் உங்களுக்குள் இருக்கும் இறைவனையும் விட வேறு யாரும் உங்களுக்கு சிறப்பாக உதவி செய்ய முடியாது… வாழ்வில் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் உங்கள் ஆழ்மனதிடம் ஒரு முறை கேளுங்கள்… யார் எடுக்கும் முடிவு தவறாக இருந்தாலும் உங்கள் வாழ்க்கையில் உங்கள் ஆழ்மனம் எடுக்கும் முடிவு நிச்சயமாக சரியாகத்தான் இருக்கும்… உங்களுக்குள் இருக்கும் இறைவனை நம்புங்கள்...  அவரை தவிர வேறு யாராலும் உங்களுக்கு சிறப்பாக வழிகாட்ட முடியாது… உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும்பொழுது அனைவரிடமும் பேசுங்கள். ஆனால் முடிவுகளை நீங்களே எடுக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்… உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில் தான்.. தீதும் நன்றும் பிறர் தர வாரா… உங்கள் மனசாட்சியிடம் பேசுங்கள்… உங்களை நம்புங்கள்… உங்களுக்குள் இருக்கும் இறைவனை நம்புங்கள்...  என்றும்  நல்லது மட்டுமே நடக்கும்..🙏

எதுவும் நிரந்தரம் கிடையாது - அர்னால்டு (Arnold Schwarzenegger)

Image
☝🏿☝🏿☝🏿☝🏿☝🏿☝🏿☝🏿☝🏿எதுவும் நிரந்தரம் கிடையாது   அர்னால்டின் வாழ்க்கை உதாரணம்.   தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப நிலை நடிப்பில் படிப்படியாக உயர்ந்து கலிபோர்னியாவின் கவர்னர் என்ற புகழின் உச்சத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய வெண்கலச் சிலை முகப்பில் நிறுவப்பட்ட வகையில் ஒரு ஆடம்பர ஹோட்டலை திறந்து வைத்தார். ஹோட்டலின் திறப்பு விழாவின் பொழுது அந்த ஆடம்பர ஹோட்டலின் உரிமையாளர் "அர்னால்டு எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஹோட்டலுக்கு வந்து முன் பதிவு ஏதும் இன்றி இலவசமாக தங்கிக்கொள்ளலாம், அவருக்கு எப்பொழுதுமே ஒரு அறை இருக்கும்" என்று அறிவித்தார் நாட்கள் நகர்ந்தன ... பதவி போனது .. புகழ் போனது .. சமீபத்தில் சாதாரண மனிதனாக அந்த ஹோட்டலுக்கு சென்ற அர்னால்டுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஹோட்டலில் எல்லா அறைகளும் புக்கிங் ஆகிவிட்டது தற்பொழுது அறைகள் ஏதும் இல்லை என்று ஹோட்டல் நிர்வாகம் கூறவே அதிர்ச்சியில் உறைந்து போனார் ஹாலிவுட் முன்னாள் ஹீரோ, கலிபோர்னியா முன்னாள் கவர்னர், அந்த ஹோட்டலை திறந்து வைத்த முன்னா...

வாண்டு பையன்

Image
  👨🏻‍💼வெளியூர்காரர் ஒருவர் காலிங் பெல்லை அழுத்தினார். 😎ஒரு வாண்டு வந்து கதவை திறந்தான். 👨🏻‍💼உங்க அப்பா இருக்காரா ? 😎இல்லை,  ஆபீசுக்கு போயிருக்கார். 👨🏻‍💼உங்க அம்மா இருக்காங்களா ? 😎இல்லை , கோயிலுக்கு போயிருக்காங்க. 👨🏻‍💼உங்க தாத்தா,  பாட்டி  யாராவது இருக்காங்களா ? 😎இல்லை ,  சித்தப்பா வீட்டுக்கு போயிருக்காங்க. 👨🏻‍💼உங்க அண்ணணாவது இருக்காணா ? 😎 இல்லை ,  கிரிக்கெட் விளையாட போயிருக்காண். 👨🏻‍💼 வந்தவர் கடுப்புடன் ,  நீ மட்டும் எதுக்கு உங்க வீட்ல இருக்க.,  நீயும் எங்கேயாவது போக வேண்டியதுதானே ? 😎 நானும் வீட்ல இல்லை ,  இது என் பிரண்டு வீடு ! . 😜😜😜😂🤣